Sunday, August 16, 2009

பூவிலும் பாலுண்டு

Posted on 11:12 AM by கதம்பம் வலைப்பூ

மூன்றாம் நூற்றாண்டிலேயே தாவரங்களில் ஆண்பால் - பெண்பால் என
இரு வகைகள் இருப்பதை மனிதன் கொஞ்சம் அறிந்துவத்திருக்கிறான் என
ஆதராங்கள் இருந்தாலும்,

ஜெர்மனியைச் சேர்ந்த கேமராரியஸ்தான் இதைச் சோதனைகள் மூலம்
உலகுக்கு அழுத்தமாக நிரூபித்தவர்.

நம் நாட்டிலும் நம் மூதாதையர்கள் இயற்கையைக் கவனித்து
இத்தாவர பாலின விதியை என்றோ நிச்சயமாய் அறிந்திருப்பார்கள்.
கார்த்திகை தீபம் அன்று, கவண் நடுவே துணியில் வைத்து
பூப்பூவாய் பொறி பறக்க எரிக்கும் கரி தருவது - பனைமரத்தின் ஆண் பூ என
சொல்லக் கேட்டிருக்கிறேன்.

செடிகள் - மலர்களில் ஆண் -பெண் பால் பேதம் பற்றி
விவரமானக் குறிப்பு பண்டைய இலக்கியங்கள், ஏடுகளில் இருந்தால்
அறிந்தவர்கள் கூறுங்கள். அறியக் காத்திருக்கிறேன்.

ஒரு மரம் அல்லது செடி காய்க்க அதன் மலரில் ''போலன்'' எனப்படும் மகரந்தம்
சேரவேண்டும் என சோதனைகள் மூலம் நிறுவியவர் கேமராரியஸ்.

ஆமணக்குப் பூவின் ''ஸ்டேமனையும்'', சோளப்பூவின் ''ஸ்டிக்மா''வையும்
நீக்கிய அவர், அவை ''விதை'' உருவாகமல் மலடாயிருப்பதை நிரூபித்தார்.

http://www.urbanext.uiuc.edu/gpe/case4/c4facts1a.html

ஸ்பினாச், பாலக் என அழைக்கப்படும் கீரைச்செடிகள் ஆண், பெண் என
இரு வகையில் இருப்பதையும், அவற்றைப் பிரித்து தூரத்தில் வளர்த்தால்
இதே போல் வாரிசு இல்லாமல் அழிவதையும் செய்துகாட்டினார்.

மிருகங்கள் போலவே , தாவரங்களும் ''பாலினச் சேர்க்கை''யாலேயே பல்கிப் பெருகுகின்றன
என தம் முடிவை ஆணித்தரமாக 1694 -ல் வெளியிட்டார்.

அறிவியல் உலகில் அடிக்கடி நடக்கும் விசேஷம் ஒன்றுண்டு. எங்கோ ஒருவர் தனியாய் பாடுபட்டு
ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்துவார். ஏறக்குறைய அதே காலகட்டத்தில் கொஞ்சம் பிந்தி
இன்னொருவர் உலகின் இன்னொரு மூலையில் அதே முடிவை எட்டுவார்.

இங்கும் பூக்களின் பால் இனம் பற்றி 1696-ல் இலண்டனில் நெஹமய்யா க்ரூ என்பவரும்
ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை அதே முடிவுகளுடன் சமர்ப்பித்தார்.

கேமராரியஸ் கண்டுபிடிப்பின் பலன்கள் விரைவில் தெரிய ஆரம்பித்தன.
ஒரே ஸ்பீஷிஸ் (இனம்) பூக்களின் ஆண் -பெண் சேர்க்கை இயற்கை!
மனிதன் செயற்கையாய் வேறு வேறு இனப் பூக்களின் ஆண் -பெண்ணைச் சேர்த்தான்.
விநோத, வேடிக்கை வண்ணங்களில் புதிய பூக்கள் தோன்றின.
அதே போல் அபூர்வ இனப் பூக்களை விரும்பும் அளவுக்கு சேர்த்து பெருக்க வைத்தான்.
முன்னர் அத்திப்பூ என்பன அதன்பின் சந்தைப்பூ ஆயின!

பின்னர் நுண்ணோக்கியால், ஆண் மகரந்தம் எப்படி ஒரு குழாய் முளைத்து (போலன் டியூப்)
பெண் மகர்ந்த ''முட்டை''யை சிறு துவாரம் போட்டு துளைத்து கருவாய் உருவாகிறது
என்ற தேவ ரகசியமும் அறிந்தான்..

உச்சமாய் கிரகர் மெண்டல் என்ற துறவி.. அறிவியல் துறக்காத துறவி...
அவரைப்பூக்களின் மகரந்தச் சேர்க்கையை அளவானக் கட்டுப்பாட்டில் நிகழ்த்தி
மரபின் விதிகளையே இம்மாநிலம் அறியத் தந்தான்!


பிறப்பின் மரபுச் சிக்கல் அறிந்து சொன்னவர் - ஒரு துறவி!
அறிவியலில் எனக்கு மிகவும் பிடித்த முரண் இது!!

நன்றி : தமிழ்மன்றம்


No Response to "பூவிலும் பாலுண்டு"