Monday, August 10, 2009

எங்கையோ சுட்டவை தொடர்ச்சி-2-காசியானந்தனின் உணர்வின் வரிகள்-

Posted on 7:14 PM by கதம்பம் வலைப்பூ

பாடம்

புரட்சியாவது வெங்காயமாவது
என்கிறாய்
தெரிந்து பேசு
காயப்படுத்தியவனின் கண்ணீரை
வாங்கும் வெஙகாயம்.
சென்னிரை வாங்கும் புரட்சி





மாவீரன்

இது உயிருக்கு வந்த சாவு அல்ல
சாவுக்கு வந்த உயிர்




நிழல்
எதிரிகளால் அழிக்கப்பட்டன எங்கள் காடுகள்
நிமிர்ந்தோம்
இன்று-போராளிகளின் நிழலில் மரங்கள்




தளை

கணவனிடம் ஓப்புதல் கேட்கிறாள்
பெண்கள் விடுதலை அமைப்பில்சேர





கோயில்

செருப்புகளை வெளியே விட்டு
உள்ளே போகிறது அழுக்கு.









ஞானம்

ஞானம் பெற்றது
நீ-உன்மண்ணில்
பள்ளிக் கூடங்கள் கட்டப்பட்டதால்
நான்-என் மண்ணில்
பள்ளிக்கூடங்கள் இடிக்கப்பட்டதால்









நாற்காலி

இங்கே வேறுபாடு அதிகம் இல்லை
நாற்காலிக்கும் கட்டிலுக்கும்.
வீடு தூங்க கட்டில்
நாடு தூங்க நாற்காலி






நிமிர்வு
தேவை பயில்வன்களல்ல வீரர்கள்
உன் உடலின் கூனல்பற்றிய கவலைவிடு
வில்லில் இல்லாத நிமிர்வா?







மந்தை
மேடை தமிழா!
ஆடாய் மாடாய்
ஆனாயடா...நீ
என்றேன் கைதட்டினான்

மானம்
உன் கோவணம் அவிழ்க்கப்பட்டதா?
அவன் கைகளை வெட்டு
கெஞ்சி கோவணம் கட்டாதே
அம்மணமாகவே போராடு







மனிதன்
இவன் பசுவின் பாலைக்கறந்தால்
பசு பால் தரும் என்கிறான்.
காகம் இவன் வடையை எடுத்தால்
காகம் வடையை திருடிற்று
என்கிறான்
இப்படியாக மனிதன்....



போர்
ஊரில் உங்கள் சுடுகாடு.
சுடுகாட்டில் எங்கள் ஊர்.




இனவெறி
மாடுகள் காணாமல்போகும் என்று
தோலில் குறிபோடும் எங்கள் மண்
கொஞ்சநாளாய்...
மனிதர்களையே காணவில்லையே.






எங்கையோ சுட்டவை தொடரும்.............



No Response to "எங்கையோ சுட்டவை தொடர்ச்சி-2-காசியானந்தனின் உணர்வின் வரிகள்-"